பெரம்பலூர்,நவ.1: பெரம்பலூரில் 3கடைகளில் பூட்டை உடைத்து, ரூ58ஆயிரம் ரொக்கம், லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் மளிகை, மெடிக் கல் ஷாப், சூப்பர்மார்கெட், ஓட்டல்கள் உள்ளன. இங்கு வேலுச்சாமி என்பவ ருக்குச் சொந்தமான மெடிக்கல்ஷாப் உள்ளது. இதேபகுதியில் மற்றொரு மெடிக்கல் ஹாப்பும் உள்ளது. அதன்அருகே கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையும் உள்ளது. ஒரே பகுதியில்உள்ள இந்த 3கடைகளிலும் நேற்று முன்தினம்இரவு மர்மஆசாமி பூட்டைஉடைத்து உள்ளே புகுந்துள்ளான். இதில் வேலுச்சாமியின் மெடிக்கல் ஷாப் பில் இருந்து ரூ3500ம், மற்றொரு மெடிக்கல்ஷாப்பில் இருந்து ரூ55ஆயிரமும், கம்ப் யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனைசெய்திடும் கடையில்இருந்து ஒரு லேப்டாப்பையும் மர்ம நபர் திருடிச்சென்றுள்ளான்.