பெரம்பலூரில் 3 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.58 ஆயிரம் கொள்ளை

பெரம்பலூர்,நவ.1: பெரம்பலூரில் 3கடைகளில் பூட்டை உடைத்து, ரூ58ஆயிரம் ரொக்கம், லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் மளிகை, மெடிக் கல் ஷாப், சூப்பர்மார்கெட், ஓட்டல்கள் உள்ளன. இங்கு வேலுச்சாமி என்பவ ருக்குச் சொந்தமான மெடிக்கல்ஷாப் உள்ளது. இதேபகுதியில் மற்றொரு மெடிக்கல் ஹாப்பும் உள்ளது. அதன்அருகே கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையும் உள்ளது. ஒரே பகுதியில்உள்ள இந்த 3கடைகளிலும் நேற்று முன்தினம்இரவு மர்மஆசாமி பூட்டைஉடைத்து உள்ளே புகுந்துள்ளான். இதில் வேலுச்சாமியின் மெடிக்கல் ஷாப் பில் இருந்து ரூ3500ம், மற்றொரு மெடிக்கல்ஷாப்பில் இருந்து ரூ55ஆயிரமும், கம்ப் யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனைசெய்திடும் கடையில்இருந்து ஒரு லேப்டாப்பையும் மர்ம நபர் திருடிச்சென்றுள்ளான்.

நேற்றுகாலை கடைகளைத் திறக்கவந்த கடைஉரிமையாளர்கள், பூட்டு உடைந் தும், திறந்தும்கிடப்பது கண்டு அதிர்ச்சிஅடைந்துள்ளனர். உள்ளேசென்று பார்த்த போது 3கடைகளிலும் ரூ58,500 ரொக்கப்பணமும், லேப்டாப்பும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்தப் புகாரின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற் றும் போலீஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் ஒருமெடிக்கல் ஷாப்பில் இருந்த சிசிடிடி கேமராவில் பதிவான காட்சியில் திருடும்போது கடையிலுள்ள சிசிடிவியில் முகம்தெரிந்துவிடாமல் இருப்பதற்காக பனிக் குல்லா அணிந்து முகத்தை மறைந்துக்கொண்டு மர்மநபர் கொள்ளையடித்துச் சென் றுள்ளான். இருந்தும் அவனைப்பற்றி பெரம்பலூர் போலீஸார் தீவிர விசாரணைநடத்தி தேடிவருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Related Stories: