விருதுநகர், நவ. 1: புதிய சொத்துவரி உயர்வை திரும்ப பெறக்கோரியும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டமும், மனு கொடுக்கும் போராட்டமும் நடைபெற்றது. விருதுநகர் நகராட்சியில் சொத்துவரி மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பழைய சொத்து வரி விதிப்பில் வீடுகளை ‘ஏபிசிடி’ என 4 கிரேடுகளாக பிரித்து, டி கிரேடுக்கு ரூ.60 பைசா சதுர அடிக்கு வரி வசூலித்து வந்தனர். தற்போது டி கிரேடு நீக்கப்பட்டுள்ளது. சி கிரேடுக்கு 0.90 பைசா வரிக்கு பதிலாக சதுர அடிக்கு ரூ.2.50 வரி வசூலிக்கப்படுகிறது. எனவே, புதிய சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும்.