கெங்கவல்லி அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கெங்கவல்லி, அக்.31:  கெங்கவல்லி அருகே, நரிப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன். இவர் மாடு வளர்த்தும் தோட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடு, கால் தவறி அருகில் இருந்த 60அடி அழ கிணற்றில் விழுந்தது. இது குறித்து முருகேசன் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) குலோத்துங்கன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் தவறி விழுந்த மாட்டை உயிருடன் மீட்டனர்.

Related Stories: