மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர், அக்.31: திருப்பத்தூரில் மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலியாகியுள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பத்தூர் புது முத்தப்பர் தெருவைச் சேர்ந்தவர் பழனி(50). இவர் அதே தெருவில் இரும்பு பட்டறை நடத்தி வருகிறார். மேலும் 20க்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு சென்றார். நேற்று காலை பார்த்தபோது 6 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தன. ஏதோ மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விலங்குகள் ஏதாவது ஊருக்குள் வந்துள்ளதா? என தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: