₹38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நாமகிரிப்பேட்டை, அக்.16: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆசியாமரியம் கலந்து கொண்டு, 66 பயனாளிகளுக்கு ₹31.68 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா, 26 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, வேளாண்மைத்துறையின் சார்பில் 5 விவசாயிகளுக்கு ₹42,220 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 118 பயனாளிகளுக்கு ₹38,21,916 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முகாமில், அனைத்து துறைகளின் சார்பில், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் நாமக்கல் ஆர்டிஓ கிராந்திகுமார்,  சிறுபான்மையினர் நலஅலுவலர் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் உபார்ஹத் பேகம், மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: