திருச்சுழி, அக்.12: திருச்சுழி அருகே சாலை அலங்கோலமாக இருப்பதால் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராமமக்கள் பரிதவித்து வருகின்றனர். திருச்சுழி அருகே மறவர்பெருங்குடி, தும்முசின்னம்பட்டி, சலுக்குவார்பட்டி, சுத்தமடம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சாத்தூரிலிருந்து மறவர்பெருங்குடி வழியாக கமுதிக்கு தினந்தோறும் 3 முறை அரசு பஸ்கள் சென்று திரும்பின. தற்போது மறவர்பெருங்குடியிலிருந்து க.விலக்கு வரை முற்றிலும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதை காரணம் காட்டி அரசு பஸ்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.