கெங்கவல்லி சுவேத நதியில் மணல் கடத்தியவர் கைது

கெங்கவல்லி, அக்.11:  கெங்கவல்லி சுவேத நதியில் மணல் கடத்தியவரை கைது செய்த போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுவேத நதியில் மணல் கொள்ளை நடப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை, கெங்கவல்லி எஸ்ஐ சிவசக்தி மற்றும் போலீசார், ஆணையம்பட்டி கிராமம் சுவேத நதிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீசார்  பறிமுதல் செய்தனர். விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டது அதே பகுதியை செல்வராஜ்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆணையம்பட்டி விஏஓ ஆனந்தன் கொடுத்த புகாரின்  பேரில் வழக்கு பதிவு செய்த ேபாலீசார், செல்வராஜை கைது செய்து, மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர். உச்சநீதிமன்ற  உத்தரவுக்கு பின், இப்பகுதியில் இதுவரை 3 டிராக்டர், ஒரு பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: