10ம் வகுப்பு மாணவன் மாயம் துப்பு கிடைக்காமல் திணறும் போலீசார்

ஆத்தூர்.அக்.11:  சே லம் மாவட்டம் நரசிங்கபுரம் திட்டா நகரை  சேர் ந்த கூலித்தொழிலாளி விஜய்(42). இவரது இரண்டாவது மகன் சந்தோஷ்  குமார்(15), ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து  வந்தார்.  கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி காலையில் பள்ளிக்கு சென்ற  சந்தோஷ்குமார், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. பல இடங்களில்  தேடியும் சந்தோஷ்குமார் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜய் ஆத்தூர் காவல்  நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்,  கடந்த 2 மாதங்களாக பல இடங்களில் தேடியும் மாயமான சந்தோஷ்குமார் பற்றிய  எந்தவித தகவலும் கிடைக்காமல் திணறி வருகிறார்கள். மாயமான மகன் பற்றிய தகவல்  எதுவும் தெரியாததால், அவரது பெற்றோர் கவலையடைந்து உள்ளனர்.

Related Stories: