மன்னார்குடி, அக்.11: மத்திய அரசு பல்கலைக் கழக மானிய குழுவினை கலைக்கப்படுவது கண்டித்து மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிற் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்கள் அனைவருக்கும் உடனே இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட முன் வரைவை திரும்பபெற வேண்டும், மேன்மைதகு பல்கலைக் கழகங்கள் என்ற பெயரில் அம்பானியின் ஜியோ பல்கலைக் கழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரி பணத்தை வாரி வழங்குவதை கைவிட வேண்டும். இந்திய மருத்துவ குழுவினை கலைத்து விட்டு மருத்துவ ஆணையத்தை உருவாக்கி மருத்துவ படிப்பிற்கு நீட் மற்றும் எக்ஸ்சிட் தேர்வுகளை கட்டாய மாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.