ஜெயங்கொண்டம், அக்.11: மகா ரதயாத்திரை விழிப்புணர்வு வாகனம் ஜெயங்கொண்டம் வந்தடைந்தது. நர்மதை ஆற்றின் நதியின் தீர்த்தம் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்டு பின்னர் பாண்டிச்சேரியில் இருந்து நர்மதை யாத்திரையானது, தொடங்கி வரும்வழி தோறும் மக்களுக்கு தீர்த்தம் வழங்கியும் மக்கள் தரிசித்தும் வருகின்றனர். இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மூலமாக நதிகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கவும் நதிநீரை தாயாக வணங்கிடவும் பண்பாட்டுடன் கலந்து இருக்கும் பூஜா புஸ்கரத்தை மக்களிடமிருந்து வெளிக்கொணர வேண்டி மகா ரதயாத்திரை விழிப்புணர்வு வாகனம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிற்கு வரப்பெற்றது. வாகனத்தில் இருந்த அம்மன் சிலைக்கு கருடானந்தா சாமி மூலம் பூஜைகள் நடத்தப்பட்டு தீபராதனை காண்பிக்கப்பட்டது.