பெரம்பலூர், அக். 11: உயர் நீதிமன்ற தீர்ப்புக்ேகற்ப ஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின்கீழ் இணைக்கக்கூடாது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூரில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற தீர்ப்புக்ேகற்ப ஓய்வூதியத்தை வருமான வரி சட்டத்தின்கீழ் இணைக்கக்கூடாது. 8வது ஊதியக்குழுவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.