குன்னூரில் கனமழை வீடுகள் இடிந்தன

குன்னூர்,அக்.7: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு, குறிஞ்சி நகர் பகுதியில் 3 வீடு இடிந்தது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் குறிஞ்சி நகர் பகுதியில் கடந்த 1991ம் ஆண்டு தொகுப்பு வீடு கட்டித்தரப்பட்டன. நாளடைவில் அந்த வீடுகள் மேலும் பழுதடைந்தது. இந்நிலையில் கடந்த 3 நாளாக பெய்து வரும் பலத்த மழைகாரணமாக நேற்று முன் தினம் இரவு அங்குள்ள 3 வீடு இடிந்து விழுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.  மேலும் இப்பகுதியில் உள்ள பல வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகவும் பீதிக்குள்ளாகி உள்ளனர். எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள, தொகுப்பு வீடுகளை அரசு கவனத்தில் கொண்டு அவற்றில் குடியிருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: