மீன்சுருட்டியில் தியாகிகள் தினம்

ஜெயங்கொண்டம்,அக்.10: ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல் நிலையம் சார்பில் தியாகிகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் மோகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் தியாகிகள் சம்பந்தமாக வினாடி வினா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

Related Stories: