அரியலூர் வந்த தாமிரபரணி புஷ்கர விழிப்புணர்வு ரதயாத்திரைக்கு வரவேற்பு

அரியலூர்,அக்,10: அரியலூரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி புண்ணிய நதிகளின் நீரை ஏந்திய ரதயாத்திரை அரியலூர் பேருந்து நிலையம் வந்தடைந்தது. அதன் பின்னர் பெருமாள்கோயில், பெரியகடை தெரு ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றில் 140 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தாமிரபரணி புஷ்கர  விழா குறித்து பக்தர்களுக்கும்,

பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்  சொற்பொழிவு நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பாஜக திருச்சி கோட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல அணியை சேர்ந்த குமார், பாஜக மாவட்ட செயலாளர்  வைரவேல், மாவட்ட துணை தலைவர் நாரயணன், இளைஞர் அணி பொதுச்செயலாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர் முத்துவேல் மற்றும் ஏராளமான விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: