செய்யாறு, அக்.4: செய்யாறில் ஓட்டலில் சாப்பிட வந்த நகை தொழிலாளியிடம் ரூ3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை அபேஸ் செய்த முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா(43), நகை தொழிலாளி. இவர் செய்யாறு காந்தி சாலையில் கடை வைத்து தங்கம், வெள்ளி நகைகளை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சிவா கடையை பூட்டிக்கொண்டு, தனது கைப்பையில் 7.5 சவரன் தங்க நகைகள், 1.75 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ30,650 பணத்தை வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். வழியில் சிறிது தூரத்தில் உள்ள ஒரு ஓட்டல் எதிரே மொபட்டை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்ததும் கைப்பையை மேசை மீது வைத்துவிட்டு கை கழுவ சென்றார்.