திருப்பூர், செப். 26: திருப்பூரில் ரூ.67.82 லட்சம் மதிப்புள்ள நூல் பண்டல்கள் திருடிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அப்பாச்சி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). இவர், அப்பகுதியில் உள்ள நூல் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். ஆர்டரின் பேரில், திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு நூல்களை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் செந்தில்குமார் கொடுத்த ஆர்டரின் பேரில், புனேவில் இருந்து ரூ.67.89 லட்சம் மதிப்பிலான நூல் பண்டல்கள், 2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி கடந்த ஜூலை மாதம் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நூல் பண்டல்கள் செந்தில்குமார் நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. லாரிகள் மட்டும் நல்லூர் காசிபாளையம் பகுதியில் நின்றது. நூல் பண்டல்களை காணவில்லை. லாரி டிரைவர்களான மாரியப்பன் (35), சுதாகர் ஆகியோர் மாயமாகிவிட்டனர்.