ஊட்டி,செப்.25: மாவட்ட நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருெநல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விண்வௌி சுற்றுலா என்ற தலைப்பிலும், 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு என்ற தலைப்பிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதலாம். கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவர்களின் கையெழுத்தில் 2 ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.