இளம்பெண் மாயம்

சேலம், செப்.11: சேலத்தில் வீட்டிலிருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் கந்தம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அருண். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியில் தங்கியிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த அமலா(23) என்பவரை காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 9ம்தேதி வீட்டிலிருந்த அமலாவை காணவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அருண் கொடுத்த புகாரின் பேரில், சூரமங்கலம் எஸ்.ஐ. ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் அமலா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவரை தேடி போலீசார் சென்னை சென்றுள்ளனர்.

Related Stories: