சத்தியமங்கலம், செப். 11: சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய அபாயகரமான மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பிஸ்கட் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி, பெருந்துறை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. 27வது கொண்டை ஊசி வளைவு அருகே இந்த லாரி திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் தலைகீழாக கவிழ்ந்தது.