காலிபணியிடங்களை நிரப்ப கோரி மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,செப்.11: பெரம்பலூரில் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஏற்றக்  கோரிக்கைகளை அரசாணைகளாக வழங்கிடகோரி தமிழ்நாடுஅரசு அனைத்து மருந் தாளுநர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் கலெக்டர்அலுவலக சிறுவர்பூங்கா முன்பு நேற்றுமாலை, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசாணைகளாக வழங்கிடக் கோரி, காலிபணியிடங்களை நிரப்ப கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கூத்தையன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆனந்தன், மாவட்ட துணைத்தலைவர்கள் தங்கதுரை, தூரிகைவேந்தன், மாவட்ட துணைச்செயலாளர்கள் அருள், அஹமது உசேன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். மாவட்டச்செயலாளர் விஜயலட்சுமி பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: