விழிப்புணர்வு பேரணி

அரியலூர், செப்.11:  திருமானூர் ஒன்றியம் அங்கன்வாடி ஊழியர்கள் ஊட்டச்சத்து வாரவிழாவையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  பேரணி நடந்தது. திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணியை திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன்  தொடங்கி வைத்தார். திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்திலிருந்து  பேருந்து நிலையம் வரை கோசங்கங்கள் எழுப்பி பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர் சாந்தி, காவல் உதவி ஆய்வாளர் மேனகா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: