ஆரணி, செப்.11: ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ராட்டினமங்கலம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறை பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கிணறு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. மேலும், ஊராட்சி சார்பிலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்வில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல தடவை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.