எஸ்ஏபி பள்ளியில் ஆசிரியர் தினவிழா

உத்தமபாளையம், செப்.7: உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. உத்தமபாளையம் எஸ்.ஏ.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் பற்றி பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் ஆசிரியர் தினம் பற்றி விளக்கினர்.

Related Stories: