புதுடெல்லி: என்னிடம் சொல்லாமல் அறிவித்த பத்ம பூஷண் விருதை ஏற்க மாட்டேன் என்று மேற்குவங்க மாஜி முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி தெரிவித்தார். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்காக பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, பிபின் ராவத், நீரஜ் சோப்ரா, சவுகார் ஜானகி என பலரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அறிவிக்கப்பட்ட 128 பெயர்கள் கொண்ட பத்ம விருது பட்டியலில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மேற்குவங்க முன்னாள் முதல்வரும் புத்ததேவ் பட்டாச்சார்ஜியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவர் அந்த கவுரவத்தை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ளார்.