சிவகங்கை: சிவகங்கையில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து எம்ஜிஆர் சிலை துணியால் மூடப்பட்டது. துணியை அகற்றி எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கையில் பஸ் ஸ்டாண்ட் முன்பு எம்ஜிஆர் முழு உருவச்சிலை உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து தேர்தல் அதிகாரிகள், எம்ஜிஆர் சிலையை துணியால் மூடினர். மானாமதுரை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாகராஜன் நேற்று சிவகங்கை வந்தார். அப்போது எம்ஜிஆர் சிலையை மூடியிருந்த துணியை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அகற்றினர். அங்கு வந்த பறக்கும் படை தாசில்தார் கண்ணன் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அகற்றக்கூடாது என தெரிவித்தனர்.