மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 112 தொகுதிகளில் சட்டவிரோத பணப்புழக்கம் இருக்கக்கூடும் : தேர்தல் ஆணையம் கணிப்பு

டெல்லி: மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 112 தொகுதிகளில் சட்டவிரோத பணப்புழக்கம் இருக்கக்கூடும் என தேர்தல் ஆணையம் கணித்திருக்கிறது. இந்த பட்டியலில் தமிழகத்தின் 39 தொகுதிகளும் இடம் பெற்று இருக்கின்றன. 17வது மக்களவையை தேர்வு செய்ய ஏப்ரல் 11ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் சட்டவிரோதமாக பணம் செலவிடப்படும் தொகுதிகளை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மார்ச் 15ம் தேதி நடைபெற்ற தேர்தல் புலனாய்வு குழு கூட்டத்தில் தேர்தலுக்காக சட்டவிரோத பணப்புழக்கம்  நடைபெறுவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கணிப்புப்படி நாடு முழுவதும் 112 தொகுதிகளில் அதிக அளவில் சட்டவிரோத பணப்புழக்கம் இருக்கக்கூடும் என்று தெரிய வந்துளளது.

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் அதிக அளவில் பணம் செலவிடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2017ம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் சட்டவிரோத பணப்புழக்கம்   காரணமாக ரத்தானது. மேலும் ஆந்திரா,தெலுங்கனா,பீகார், கர்நாடகா குஜராத் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளில் சட்டவிரோத பணப்புழக்கம் அதிகளவில் இருக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் கணிப்பில் தெரியவந்துள்ளது.

*ஆந்திராவில் 16 மக்களவை தொகுதிகளில் சட்டவிரோத பணப்புழக்கம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

*பீகாரில் 21, தெலங்கானாவில் 17, கர்நாடகாவில் 12 தொகுதிகளிலும் சட்டவிரோத பணப்புழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

*குஜராத் மாநிலத்தில் 26 மக்களவை தொகுதிகளிலும் சட்டவிரோத பணப்புழக்கம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.

நாடு முழுவதும் 112 தொகுதிகளில் ஒட்டு மொத்தமாக வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ, மதுவகைகளோ வழங்கப்படலாம் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனிடையே நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ரூ.50 ஆயிரம் கோடி ரகசியமாகவும் சட்டவிரோதமாகவும் செலவிடப்படக்கூடும் என்று தி சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனம் கணித்துள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: