ஜம்மு: காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் 2வது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. அதிகாலை 5.30 மணியளவில் மார்டர் ரக குண்டுகள், சிறிய ஆயுதங்கள் மூலமாக தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கியது. கேரி பட்டால் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. எனினும் பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.