ஆட்டிஸம் ஏன், எதற்கு, எப்படி?

என் நண்பனுடைய மகனுக்கு ஆட்டிஸம் குறைபாடு இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார். ஆட்டிஸம் என்பது மனநல குறைபாடா? இதனை சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியாதா? சரியான சிகிச்சை முறையை எடுத்துக் கொண்டால் இவர்கள் மற்ற குழந்தைகள் போல் செயல்படுவார்களா? என் நண்பன் தன் குழந்தையின் நிலையை கேட்ட நாள் முதல் மிகவும் கவலையாக இருக்கிறான். ஆட்டிஸம் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகிறார்கள். ஆட்டிஸம் குறைபாடு பற்றி சொல்லுங்களேன்?

- கணேசன், ஸ்ரீரங்கம்

“இந்தியாவில் மட்டுமே, சுமார் 150 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிப்படைந்து இருப்பதாக புள்ளி விவரம். இது குழந்தைகளுக்கு ஏற்படும் மதியிறுக்க நோய்” என்று ஆட்டிஸம் பற்றி விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் ஹோமியோ நிபுணர் பேராசிரியர் டாக்டர் ஆர்.விஜய் ஆனந்த். ஆட்டிஸம் என்பது மனநலக் குறைபாடு என்று பலர் தவறாக நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. இவர்கள் மற்ற குழந்தைகள் போல் சாதாரணக் குழந்தைகள் தான். பிறந்தவுடனேயே ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிய முடியாது. அவர்களின் மூன்று வயதில் இருந்து தான் பாதிப்பு இருப்பது தெரிய வரும். நரம்பியல் பாதிப்பு சம்பந்தப்பட்டது மதியிறுக்க நோய். இதன் காரணமாக, மூளையின் செயல்பாடு குறைந்து, குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.மரபணு காரணிகளாலும், கர்ப்பமாக இருக்கும்போது, சுற்றுச்சூழல் ரசாயனங்களை எதிர்கொள்வது, சில குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்வது, மனஅழுத்தம் ஏற்படுவது ஆகிய காரணங்களாலும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படலாம்.

ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கீழ்க்காணும் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் தென்படும்.

*சமூகத்துடன் ஒட்டி வாழ்வதற்கான குணங்களிலும், பழக்க வழக்கங்களிலும் பாதிப்பு ஏற்படும்.

*அவர்களுடைய பேச்சு மற்றும் உடல்மொழி மற்றவர்களோடு தொடர்பு கொள்ள முடியாது.

*அவர்கள் தனி உலகத்தில் இருப்பார்கள். அவர்களின் செயல்கள், நடத்தைகள், விருப்பங்கள் விநோதமாக இருக்கும்.

*இயல்புக்கு மாறான செயல்பாடுகள் (அதாவது, தொடர்ந்து ஒரே மாதிரி செயல்படுதல், கார், பொம்மை, சாவிகள் ஆகியவற்றைப் பார்த்து தீவிரமாக கண்காணிப்பது)

* விருப்பத்தை பேச்சு மூலமாக வெளிப்படுத்த முடியாமை.

*தனது தேவைகள் குறித்து சைகையில் வெளிப்படுத்துதல்.

*குறிப்பிட்ட வார்த்தைகளை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது

*காரணம் இல்லாமல் சிரிப்பது, அழுவது.

*பேசும்போது கண்களைப் பார்ப்பதை தவிர்த்தல்.

*பாடங்களை கற்பிக்கும்போது கவனச் சிதறல்கள் ஏற்படுதல்.

*உடல் அளவில் அதீதமாக அல்லது குறைவாக செயல்படுவது.

*சாதாரண நிலையில் பேச்சுக்களுக்கு பதில் அளிக்க மறுப்பது.

* பொருட்களை சுழற்றிக்கொண்டே இருத்தல்.

*குறிப்பிட்ட பொருட்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுதல்.

*வலி ஏற்பட்டால் அதன் உணர்ச்சியை வெளிப்படுத்தாமை அல்லது அதிக அளவில் உணர்ச்சியை வெளிப்படுத்துவது.

*கூச்சலிடுவது அல்லது அலறுவது.

*குறிப்பிட்ட வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறுவது .

*தனிமையை விரும்புவார்கள். மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள்.

*மாற்றத்தை விரும்பாதவர்கள். வீட்டில் இருக்கும் சின்னச்  சின்ன பொருட்களைக்கூட அவர்கள் மாற்றிவைக்க அனுமதிக்கமாட்டார்கள்.

* நீங்கள் எவ்வளவு சத்தம் போட்டுப் பேசினாலும்  அதற்கு கவனம் செலுத்த மாட்டார்கள். சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைக்கு காது கேட்கவில்லை என்று நினைப்பார்கள். ஆனால்  உண்மையில் ஆட்டிச குழந்தைகளுக்கு காதில்  குறைபாடு இருக்காது .

*ஆபத்தைப் பற்றிய பயம் இவர்களுக்கு இருக்காது போன்ற பாதிப்புகளை ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் நாம் பார்க்க முடியும்.

ஆட்டிஸம் இருப்பதை ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் கண்டறிய முடியாது. மருத்துவ ஆய்வு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி குறித்து முழுமையாக ஆய்வு செய்வதன் மூலமே கண்டறிய முடியும். மதியிறுக்க நோய் குறித்த புலமை பெற்ற வல்லுநர்களைக் கொண்டு குழந்தைகளின் மனஅளவிலான மாற்றங்களை மதிப்பீடு செய்ய முடியும்.ஹோமியோபதியில் ஆட்டிஸம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மரபணு ரீதியிலான பாதிப்புகள் அடிப்படையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆட்டிஸம் உள்ளதா என்பதை ஆய்வுசெய்ய, மரபணு ரீதியான காரணமாக அமையும் வகையில், குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் தாக்கியுள்ளதா என்பது முழுமையாக ஆய்வு செய்யப்படும். மேலும், குழந்தைகளின் செயல்பாடுகள் அடிப்படையில் குறைபாடு

களின் அளவு, சமூகத் திறன், தகவல் தொடர்பு, பேசும் திறன், உணர்ச்சிவசப்படுதல் ஆகியவை குறித்தும் மருத்துவர் ஆய்வுசெய்வார்.

ஆட்டிஸம் பிரச்சினைக்கு ஹோமியோபதியில் 20 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயின் நிலை அடிப்

படையிலேயே சரியான மருந்து மற்றும் கூடுதல் மருந்துகள் தேர்வுசெய்யப்படுகின்றன. ஹோமியோபதி மருந்துகள் பாதுகாப்பானது, நச்சுத்தன்மை இல்லாதது.மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் சிறந்த முன்னேற்றத்தை காணமுடியும்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நோயின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டு, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் முடிவுசெய்யப்படும்.பெற்றோர்களால் தங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த குறைப்பாட்டினை ஏற்க மறுக்கிறார்கள். ஆட்டிஸம் குழந்தைகளுக்கு என தனித்திறமை உண்டு. சில குழந்தைகளுக்கு சமைப்பதில் ஆர்வம் இருக்கும். சிலருக்கு வரைய பிடிக்கும். இவர்களுள் இருக்கும் ஆர்வத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மருத்துவம் செய்வதன் மூலம் எந்த விதமான முன்னேற்றமும் இருக்காது என்று நீங்களாக நினைத்து அவர்கள் மேல் கவனம் செலுத்த தவறிட வேண்டாம்.உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் குழந்தை தன்னிச்சையாக வாழ வேண்டும். அவர்கள் திறமையை கண்டறிந்து அதை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு திட்டமிடலாம் என்பதைக் கற்றுக் கொடுங்கள்’’ என்றார் டாக்டர் ஆர்.விஜய் ஆனந்த்.

தொகுப்பு : ப்ரியா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: