ஜம்முவில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் ஹெப் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால், தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சம்பவ இடத்தில் இருந்து 3 தீவிரவாதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.