புதுச்சேரி: புதுச்சேரியில் இரட்டை ஆதாயம் பெரும் பதவிகளை கொண்டுள்ள 8 எம்.எல்.ஏக்கள் வருகிற 27ம் தேதி ஆஜர் ஆகி விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர், குடியரசுத் தலைவருக்கு புகார் மனு அளித்திருந்தார். மேலும் அவர்களை தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார். இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, வாரியத் தலைவர் உள்ளிட்ட பிற பதவிகளை வகிக்கும் புதுச்சேரியின் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.