ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து துண்டித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகளில் பொதுமக்கள் குடிநீர் கட்டணம், வீட்டுவரி, சொத்து வரி, காலி மனைவரி, தொழில்வரி, வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் உள்ளிட்ட வரிகள் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 5 கோடி ரூபாய் வரி வசூல் பாக்கி உள்ள நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் நகராட்சி ஆணையர் மூர்த்தி, மேலாளர் அன்புச்செல்வி, பொறியாளர் ராஜகோபாலன், மற்றும் பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டனர்.