தஞ்சை, ஏப்.20: தஞ்சை அருகே பாபநாசம் கணபதி அக்ரகாரம் புதுத்தெருவில் கோயிலுக்கு பாதை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது; தஞ்சை கணபதிஅக்ரகாரம் புதுத்தெருவில் 130 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கருப்பையா கோயில் 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. இக்கோயிலுக்கு செல்லும் பாதை அருகில் உள்ள நில உடமைதாரர் ஒருவர் ஆக்கிரமித்து அடைத்துவிட்டார்.