தூத்துக்குடி, மார்ச் 2: தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் செல்வம்( 75). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு தூத்துக்குடி நகர்பகுதியை சேர்ந்த அருள்ராஜ்(33) என்பவர் பைக்கில் வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக முதியவர் செல்வம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். வடபாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.