லாரி மோதியதால் மின் கம்பம் சாய்ந்து பைக்கில் சென்ற வாலிபர் பரிதாப பலி

விக்கிரவாண்டி, ஜூலை 4: விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் லாரி மோதி மின்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேவகன் மகன் மோகன் குமார் (31). இவர், நேற்று சொந்த வேலை காரணமாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் கிராமத்தில் சென்றபோது எதிரே சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது மின்கம்பமானது பைக்கில் வந்த மோகன் குமார் மீது சாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேவகன் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மோதியதால் மின் கம்பம் சாய்ந்து பைக்கில் சென்ற வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: