மேல திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

நெல்லை, மே 14: மேலதிருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தென் திருப்பதி என அழைக்கப்படும் மேல திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் சித்திரை பிரமோற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டிற்கான திருவிழா, கடந்த 3ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது.

2ம் திருநாள் அன்று காலை தங்கப்பல்லக்கில் பெருமாள், தாயார் வீதியுலா நடந்தது. 7ம் தேதி இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம், 10ம் திருநாளான நேற்று முன்தினம் நடந்தது. இதைத்தொடர்ந்து தீர்த்தவாரி வைபவம் நேற்று காலை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

The post மேல திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: