முத்துப்பேட்டை வட்டாரத்தில் விட்டு விட்டு தூறல் மழை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை வட்டாரத்தில் விட்டு விட்டு தூறல் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்காற்று வீசியது. முத்துப்பேட்டை பகுதியில் சமீப காலமாக கடும் வெயில் மற்றும் கோடை வெப்பம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு வகையில் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் விவசாயிகள் உழுது வைத்திருந்த வயலில் நெல் தெளிக்க முடியாமல் இருந்தனர். இந்த நிலையில் மக்களுக்கும் விவசாயிகளும் மகிழ்ச்சி தரும் வகையில் நேற்று காலை முதல் மாலை வரை குளிர்ந்த காற்றுடன் மேகமூட்டம் காணப்பட்டது. இடையிடையே மழை தூறல்கள் போட்டது. இரவிலும் இடையிடையே தூறல்கள் விழுந்தது. இதனால் வெப்பம் குறைந்து குளி்ர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post முத்துப்பேட்டை வட்டாரத்தில் விட்டு விட்டு தூறல் மழை appeared first on Dinakaran.

Related Stories: