பள்ளியில் முப்பெரும் விழா

மதுரை, பிப். 9: மதுரை சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வினாடி வினா போட்டிகளில் வென்றவர்கள் மற்றும் தேசிய அறிவியல் கண்காட்சி இஸ்ரோவில் பங்கேற்று வென்ற மாணவருக்கும், பள்ளிக்கல்வித்துறை நடத்திய கலைத் திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வென்றவர்கள் என 70 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 100 சதவீகிதம் பள்ளிக்கு வருகை புரிந்த 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். இதில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கவுன்சிலர் லக்ஷிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

The post பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: