சென்னை: நீதிபதி வீட்டிற்கு கொண்டு சென்ற வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர் மதிவாணன். இவர் விசாரித்த 100-க்கும் மேற்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கு ஆவணங்கள் நீதிபதியின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டதாக, பிறகு காணாமல் போனதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.