நிலுவை தொகையை வழங்க தூய்மை பணியாளர்கள் மனு

சிவகங்கை, அக்.21: காளையார்கோவில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்ககோரி கலெக்டர் ஆஷாஅஜித்திடம் மனு அளிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காளையார்கோவில் ஊராட்சியில் சுமார் 30 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் 9பணியாளர்கள் மட்டுமே நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். அதில் 3 பேர் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களுக்கும் குறைந்தது சுமார் ரூ.40 ஆயிரம் வரை ஊராட்சி நிர்வாகம் 2018ல் இருந்து 2021ம் ஆண்டு வரை கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. பலமுறை அரசு அலுவலர்களிடம் இது குறித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post நிலுவை தொகையை வழங்க தூய்மை பணியாளர்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: