நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்பி பங்கேற்பு

நாமகிரிப்பேட்டை, செப்.17: நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலாவில், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டார். நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலாவில், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், ஒன்றிய செயலாளர் ராமசுவாமி தலைமையில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பேசுகையில், ‘வருகிற ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில், அனைவரும் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை, இப்ேபாதிருந்தே பொதுமக்களிடம் எடுத்து கூறி ஆதரவு திரட்ட வேண்டும். திமுகவின் கரங்களை பலப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாயவன் மற்றும் ரமேஷ்குமார், கிருபாகரன், சர்தார், ஜெகதீசன், இளையப்பன், சித்ரா சரவணன், பழனிசாமி, அருள், கதிர்வேல், நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: