கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞர் கைது

 

நாமக்கல், செப்.11: நாமக்கல் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு எஸ்ஐ வெற்றிவேல் மற்றும் போலீசார் நேற்று வெப்படை அருகே, சவுதாபுரம் தரைப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வடமாநில வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனடியாக அவரை போலீசார் மடக்கி பிடித்து, சோதனை செய்தபோது 100 கிராம் கொண்ட கஞ்சா இருந்தது.

அதை போலீசார் பறிமுதல் செய்தனர் விசாரணையில், அவரது பெயர் பிரவாகர் தாஸ் (30) என்பதும், சவுதாபுரம் பகுதியில் ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞர் கைது appeared first on Dinakaran.

Related Stories: