தொடரும் இன்னல்… உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 51.53 கோடியாக அதிகரிப்பு!!

வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 51.53 கோடியாக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 53 லட்சத்து 27 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 91 லட்சத்து 91 ஆயிரத்து 485 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 98 லட்சத்து 66 ஆயிரத்து 848 பேர் குணமடைந்துள்ளனர்.  எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 69 ஆயிரத்து 507 பேர் உயிரிழந்து உள்ளனர்….

The post தொடரும் இன்னல்… உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 51.53 கோடியாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: