திண்டுக்கல்லில் மனைவியை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்த கணவர் கைது

 

திண்டுக்கல், ஜூன் 6: திண்டுக்கல் அருகே என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (24). கூலித்ெதாழிலாளி. இவரது மனைவி பாக்யலட்சுமி (21). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் ராதாகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ராதாகிருஷ்ணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாக்யலட்சுமி கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், உருட்டு கட்டையால் பாக்யலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாக்யலட்சுமி திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ அருண் நாராயணன் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணனை கைது செய்தார்.

The post திண்டுக்கல்லில் மனைவியை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்த கணவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: