திண்டுக்கல்லில் ஜன.17ல் மினி மாரத்தான் போட்டி

 

திண்டுக்கல், ஜன. 12: திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் ஜன.17ம் தேதி மினி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஜன.17ம் தேதி வருகை புரிய உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் போட்டிகள், இலட்சினை வரைதல் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி, வீரமங்கை வேலுநாச்சியர் பற்றிய பேச்சுப் போட்டிகள், மினி மாராத்தான் விழிப்புணர்வு போட்டி, இருசக்கர வாகன பேரணிகள் ஆகிய போட்டிகள் சிறப்பாக நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோரால் வழங்கப்படவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி ஜன.17ம் தேதி காலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கப்படவுள்ளது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் ஜன.17ல் மினி மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: