‘தமிழ்நாடு’ நாள் விழாவை முன்னிட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

 

ஈரோடு, ஜூலை 13: ஈரோட்டில், ‘தமிழ்நாடு’ நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பேச்சு போட்டிக்கு தமிழாசிரியர்கள் கலைசெல்வன், ஷீலாதேவி, கருப்புசாமி ஆகியோரும், கட்டுரை போட்டிக்கு ஆசிரியர்கள் கந்தசாமி, யுவராணி, காயத்ரிதேவி ஆகியோரும் நடுவர்களாக செயல்பட்டனர்.

ஒருங்கிணைப்பாளராக ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ரெஜினாள் மேரி பொறுப்பு வகித்தார். மேலும் பேச்சு போட்டியில் 86 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், ராயபுரம் அரசு பள்ளி மாணவர் ஆகாஷ், மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலை பள்ளி மாணவர் ஐ.மைந்தன்குமார், கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யா ஸ்ரீ ஆகியோர் முதல் 3 பரிசுகளாக முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 ரொக்கம் வென்றனர். இதைத்தொடர்ந்து, கட்டுரை போட்டியில் 91 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், நல்லாம்பட்டி அரசு பள்ளி மாணவர் விஷால், சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மகளிர் பள்ளி மாணவி மோனிஷா, பட்டிமணியக்காரன்பாளையம் அரசு மாதிரி பள்ளி மாணவி லோ.ச.அம்பிகா ஆகியோர் முதல் 3 பரிசுகளாக ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 ரொக்கப்பரிசுகளை வென்றனர்.

The post ‘தமிழ்நாடு’ நாள் விழாவை முன்னிட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: