கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஈரோடு, ஜூன் 20: கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் டிஎன் பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டதில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த டிஎன் பாளையம், காலனியை சேர்ந்த சென்னியப்பன் மகன் நந்தகுமார்(24) என்பவரை கைது செய்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: