தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சமூக தணிக்கை செய்ய மேலும் 2 கல்லூரிகளுடன் ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இந்து கல்லூரி, பட்டாபிரம் மற்றும் பெட்ரிசியன் கலை கல்லூரி ஆகிய கல்லூரிகளுடன் சமூக தணிக்கை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் இணை மேலாண்மை இயக்குநர் சிவகிருஷ்ணமூர்த்தி, வாரிய நிர்வாகப் பொறியாளர் வி.பாண்டியன், வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் நிர்மல்ராஜ், இந்து கல்லூரி உதவி பேராசிரியர் ஜெ.ராஜன், பெட்ரிசியன் கலை கல்லூரி உதவி பேராசிரியர் ஜெ.திவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற வேண்டும். கட்டுமான பணிகளை பயனாளிகள் பார்வையிட செய்ய வேண்டும். இது போன்ற இதர அம்சங்கள் குறித்த சமூக தணிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற சமூக தணிக்கை செய்வதன் மூலம் திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை களையவும், உரிய நேரத்தில் திட்டத்தினை முடிக்க உதவியாக இருக்கும். இதுவரை 7 திட்டப்பணிகளில் சமூக தணிக்கை செய்ய 6 கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது….

The post தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சமூக தணிக்கை செய்ய மேலும் 2 கல்லூரிகளுடன் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: