தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

 

தேனி, ஜூலை 4 : தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்ட கலக்டர் அலுவலகம் முன்பாக நேற்று தேனி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை மாரி தலைமை வகித்தார். திராவிட நாராயணன், சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். தேனி தமிழரசி சிறப்புரையாற்றினார்.

இதில் மாரிவேந்தன், சண்முகம், ஆறுமுகம், ரேவதி, கதிரியம்மாள், சுருளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மணிப்பூர் மாநில வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு நீதி வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் சனாதான சட்டத்தை பரப்புரை செய்யும் தமிழ்நாட்டு கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

The post தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: