அரியலூர் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் பேராசிரியர், பணியாளர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்

அரியலூர், ஜூலை 4: அரியலூர் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் ஒப்பந்த கடிதத்தை வழங்காமல் காலம்தாழ்த்தி வரும் முதல்வரைக் கண்டித்து, பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கல்லூரி வளாகத்தில் 3வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளாங்குடி அடுத்த காத்தான்குடிக்காடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒப்பந்தப் பேராசிரியர், பணியாளர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு கடிதம், பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட பணிநீட்டிப்பு கடிதத்தில் ஒப்பந்தப் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 67 பேர் கையொப்பமிட்டனர். அப்படி கையொப்பமிட்ட ஒப்பந்த ஆணையின் நகல்களை கல்லூரி முதல்வர் தர மறுப்பதாகவும், பேராசிரியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பணி நீட்டிப்பு கடிதம் வழங்கத் தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி அனைத்து துறை பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கல்லூரி வளாகத்தில் 3வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post அரியலூர் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் பேராசிரியர், பணியாளர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: