அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

கரூர், ஜூலை. 4: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பெருந்தொற்றினால் முற்றிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.கொரோனா தொற்றினால் முற்றிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கலந்தாய்வில், அவர்களின் கல்வி, உடல்நலம், மனநலம், காப்பாளர்களின் பராமரிக்கும் தன்மை குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், எதிர்கால திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தக்க தீர்வு காணுதல் குறித்தும், குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி சார்ந்த தேவை ஏற்படின், உடனடியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலகம் முலமாக தொடர்பு கொள்ளலாம். குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகள் குறித்து குழந்தைகள் தெரிந்த வைத்திருக்க வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக, குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் பாராட்டினார்.இந்த நிகழ்வில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்ப்ரியா, பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாரா மஞ்சு மற்றும் குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

The post அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: